புரியாத ஒரு பாடத்தை!
குறிப்பெடுத்துக்கொண்டிருந்த - ஒரு!
குருகிய காலத்தில் எனக்கொரு!
குழந்தை பிறந்திருக்கிறது - அந்த!
குறிப்பேட்டின் நடுப்பக்கத்தில்..!
எனக்கு பிறந்த குழந்தையை!
எல்லாருக்கும் எடுத்துக் காட்ட ஆசைதான்..!
ஆனால்..!
அது உனக்கு சோறுபோடாது என்று!
என் உடன்பிறந்தவர்களும்..!
அவள் எவள் என!
ஏளனம் செய்ய ஊராரும் காத்திருப்பர்..!
என் குழந்தையை!
எந்த பத்திரிக்கையும்!
பிரசுரம் செய்யாது..!
அதற்கு நான் சினிமாவிலோ..!
சங்கத்திலோ.. சேர்ந்து!
பாட்டெழுதியிருக்க வேண்டும்..!
இங்கே படைப்புகளுக்கு அல்ல..!
படைப்பாளிகளுக்கே முக்கியத்துவம்!
கொடுக்கப்படுகிறது..!
கருவிலுருந்த குழந்தையை!
மீண்டும் கருவுக்குள்ளே.. வைத்து!
திணித்து வைத்ததைப்போல..!
என் கவிதை காத்துக்கிடக்கிறது.!
அந்த குறிப்பேட்டின் நடுப்பக்கத்தில்
![](/img/kavithai-logo.svg)
தை.ரூசோ