தமிழ் கவிதைகள்
புதிதாக கவிதைப் பதி
ஹைக்கூ கவிதைகள்
தமிழ் கவிதைகள்
இன்றையக் கவிதை
தொடர்பு கொள்க
உள்நுழைய
பதிவு
மாலை - சுமதி ரூபன்
நுழை வாயில்
தமிழ் கவிதைகள்
மாலை - சுமதி ரூபன்
Photo by
Etienne Girardet
on
Unsplash
கூட்டத்தின் நடுவே
கழுத்தோடு கைகொழுவி
முதுகோடு முகம் சாய்த்து
மோகித் துவழ
மெல்லக் கை விலக்கி
வெகுதுாரம்
அகன்று
விழி
தவிர்த்து
பல மணிகள்
வீணே தொலைய
கனக்கும் நெஞ்சை
வாஞ்சையுடன் கடிந்து
கண்ணீர் துளியை
வரிந்து உள்ளடக்கி
துாரப்புள்ளியாய்
உன் உருவம்
தேடி
களைத்து
வெறுமனே விழ
இன்னுமொரு மாலையில்
உன் மேல் பொதியான
காதுக்குள்
முணுமுணுத்தாய்
'வீணாய் எதற்காக ?
அவலாய் அரைபடுவோம் '
சுமதி ரூபன்
நலமுள்ள நட்பு
எதிர்காலத்திற்கான சிறகுகளைச் சேகரிப்போம்
Comments
Authentication required
You must log in to post a comment.
Log in
There are no comments yet.