காதல் கடிதம் - நதி

Photo by Jr Korpa on Unsplash

என் காதலை
உன்னிடம் சொல்ல
ஆசைப்பட்டே
கடிதம் எழுதினேன்.

உனக்கு புரிந்துவிடுமோ
என்று பயந்தே
அதைக்
கவிதையாய் எழுதினேன்.

கவிதை புரிந்தால்,
என் காதல் புரிந்தால்,
உன்னைத் தந்துவிடு
பரிசாய் எனக்கு.

கவிதை மட்டுமே
புரிந்தால்
என் வரிகளை
வாழ்த்திச் சென்றுவிடு.

கவிதையும் புரியாது போனால்
என் மடலோடு
என்னையும் சேர்த்து
என்னிடமே தந்துவிடு.

வாய்மொழி ஏதுமின்றி
விலகிச் சென்றுவிடு,
விடைபெற வேண்டித்
திரும்பியும் பாராதே.

அன்றி, என்னிடம்
கவிதையின் (என் காதலின்)
பொருள் மட்டும்
கேட்டுவிடாதே!

என்னுள்
புதைந்தே
இறந்துவிடுவேன்
நான்
நதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.