என் கருப்பையை
எப்போதும்
மூடிவைக்கவே
விரும்புகிறேன்.
என் வாழ்வே
பயங்கரமானதாகிற போது
எப்படி?
அகதி வாழ்வும்
அவலப்பெயர்வும்
பதுங்கு குளியும்
பாய் விரித்து படுக்க முடியாத
நிம்மதியற்ற இரவும்
எப்போது
நான் பாலியல் பலாத்காரத்திற்கு
ஆளாவேனோ என்பதுவும்
வசந்தமில்லா வாழ்வும்
நம்பிக்கை சிறிது மில்லா
பாலைவன மனதும்
எக் கணமும்
என் உயிர் பறிக்கப்படலாம்
என்கின்ற உண்மைகள்
எல்லாவற்றையும் மறைத்து
எப்படி ஓர் உயிரை
என் கருப்பையில் சுமப்பது?

நளாயினி தாமரைச்செல்வன்