அம்மா - மு.சோமிலன்

Photo by Daniele Levis Pelusi on Unsplash

அன்னையவளுக்கு என் கிறுக்கலில் ஒன்று......

அன்பெனும் பிறப்பிற்கு
வற்றாத ஊற்றிவள் - பண்பில்
அகிலத்தையே வசீகரிக்கும் தேவதையிவள்

வர்ணிக்க முடியாப்பேரன்பு கொண்டு
காதலிப்பவள் - ஆனாலும்
வர்ணிக்க முயன்றே கணமும்
தோற்றுப்போகிறோம் - முடிவிலியால்

வரையறை அற்றது அவள் அன்பு
சிறு குறையற்றது அவள் காதல்
குறும்புகள் சண்டைகள் கோபங்கள்
அனைத்தையும் கட்டிப்போடுகிறது
அவளது ஒற்றை முத்தம்

சமயங்களில் எனை
குழந்தையாய் மாற்றுகின்றாள்
தருணங்களில் அவள்
குழந்தையாகவே மாறுகின்றாள்

வற்றாத ஊற்று அவள் கருணை
"அம்மா"
அவள் முடிவிலியாய்ப்பொழியும்
அன்பு மழை
மு.சோமிலன்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.