நகரமமும் நானும் - மனோவி, சென்னை

Photo by Patrick Perkins on Unsplash

நாகரீக மோகத்தால்!
நகரம் நோக்கி நகர்ந்த நான்!
நற்செல்வம் பல இருந்தும் எதையோ!
நாடி மனதாற் திரிந்தேன்..!!
பச்சைபசேலென்ற வயல்கள்!
வற்றாத ஓடைகள்!
ரீங்காரமிடும் குருவிகள்!
மனிதரை மதிக்க தெரிந்த மக்கள்!
மகிழ்வு தரும் திருவிழாக்கள்!
வெட்டவெளி விளையாட்டுகள்!
என என்னுள்!
கிராமத்து இன்பங்கள் நிழலாடின..!!
!
ஓங்கிய கட்டிடங்கள்!
தூய்வற்ற தண்ணீர்!
கூண்டு பறவைகள்!
கூத்தாடும் இரவுகள்!
கணினியே கதியென மக்கள்!
வீடியோ விளையாட்டுகள்!
என எதையுமே!
ஏற்கவில்லை என்னின் மனம்..!!
!
துன்பத்திற்கு விலையாய் கொடுத்த!
இன்பங்களை நினைந்து!
கிராமத்திற்கு திரும்பினேன்.!
!
கவிதையாய் இருந்த என் கிராமம்!
கசங்கி கெட்டது கண்டு!
கதி கலங்கி விட்டேன்..!!
எது வேண்டாமென எண்ணினேனோ!
அது அவசரகதியில் வளர்ந்து வருகிறது!
மனைகளாகும் வயல்கள்!
மறைந்து போன பறவைகள்!
தொலைபேசும் மக்கள்!
தொல்லைகாட்சி என மெல்ல!
நகராமாய் இல்லை நரகமாய்!
உருமாறி வருகிறது என் சொர்க்கம்
மனோவி, சென்னை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.