விடியலை தேடி - மித்திரன், கொழும்பு. இலங்கை

விடியலை தேடி - Tamil Poem (தமிழ் கவிதை) by மித்திரன், கொழும்பு. இலங்கை

Photo by Paweł Czerwiński on Unsplash

விழிகளினோரம் விடியலைத்தேடி!
விதைத்துப்போன!
விண்ணப்பங்கள்!
விடையறியாமலே வழிகளினோரம்!
விடைகொடுக்கும்..!
சுதந்திரக்காற்று சற்றும்!
சமாதானத்திற்கு(ம்)!
சம்மதமற்று..!
சமாதான சம்மதக்கொடி!
சாளரத்தின் ஓரம் சாரமற்றுப்போய்!
சரிந்து கிடக்கிறது சாக்கடையில்!
சத்தியமாய் இல்லை சமாதானம் எந்த!
இனங்களும் இதையறியாது எந்த!
விதைகளும் விழுதெறியாது!
இனியும்..!
உன்னதப்பட்டுப்போன எம்மின!
விடிவின்!
உயிர்த்துடிப்புகளுக்காய்!
உதிர்ந்துபோய் கிடக்கும் என்!
உணர்வுகளற்ற!
உறவுகளின்!
உதிரிப்பூக்கள்!
உரிமைகளற்றும் உடைமைகளற்றும்!
உறங்கி கிடக்கின்றோம்!
உணர்வுகளற்று உதிர்ந்துபோய்!
நிம்மதிகள் தினமும்!
நிர்மலமாகிப் போகின்றன
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.