மழைத்துளியா? மறுபிறவியா? - கோமதி நடராஜன்

Photo by Rodion Kutsaiev on Unsplash

கங்கையும், கழனியும் !
கதிரவன் ஒளி பட்டு !
கணத்தில் ஆவியாகி !
அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும். !
அடித்த காற்றில்,திசைமாறி, !
இடித்த இடியில்,இடம் மாறி!
கங்கையிலும் கழனியிலும், மறுபடியும் !
விழுந்த மழைத் துளியில் !
கங்கை எது ?கழனி எது ? !
மாகானும் மாபாவியும் !
காலனின் கயிறு தொட்டு!
நொடியில் ஆவி அடங்கி!
அண்டம் தொடாத,ஆத்மாக்களாய் உலவும். !
பாவக்கணக்கில் இடம் மாறி!
புண்ணியக் கணக்கில்,இனம் மாறி!
மகானாய் மாபாவியாய் என்றிருக்க,மறுபடியும் !
ஜனித்த சிசுக்களில்!
மகான் யார் ?மாபாவி யார் ?
கோமதி நடராஜன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.