எமதுலகில் சூரியனும் இல்லை - ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

எமதுலகில் சூரியனும் இல்லை - Tamil Poem (தமிழ் கவிதை) by ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

Photo by Tengyart on Unsplash

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்!
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்!
இறப்பர் விலை அதிகரித்த போதும்!
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென!
உணர்கிறது இதயம் எப்போதும்!
அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்!
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே!
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்!
இரு பாதங்களையும் வைத்தபடி!
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து!
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி!
தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்!
உரிமை எமக்கில்லை பிள்ளையே!
ஊருமற்று நாடுமற்று!
லயன் தான் வாழ்க்கையே!
கிணற்றுத் தவளைகள் போல!
லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்!
உரிமையில்லை எதற்கும்!
இது பற்றிக் கதைக்கவும் கூட
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.