ஐயாசாமியின் ரிஷிமூலம் - வசந்தகுமார்

ஐயாசாமியின் ரிஷிமூலம் - Tamil Poem (தமிழ் கவிதை) by வசந்தகுமார்

Photo by FLY:D on Unsplash

மகனிடம் வட்டியும் முதலுமாய்!
செலுத்தும் ஒப்புதலுடன்தான்!
அப்பாவிடம் கடன் வாங்கினோம்!
ஒரு சிலருக்குத்தான்!
ஓப்புதல்படி திருப்பிசெலுத்தும்!
வாழ்க்கை அமைகிறது.!
சிலர் முதல் மட்டும்!
திருப்பிச்செலுத்துகின்றனர்!
சிலர் வாழ்க்கை முழுவதும்!
வட்டிமட்டும் செலுத்துகின்றனர்!
சிலர் எதையும் செலுத்தமுடியாமல்!
சாமியாகிவிடுகின்றனர்!
சாமியாகியவனின் மகனின் கண்ணுக்கு!
வீதியில் தெரிவோரெல்லாம்!
தகப்பன்சாமியாய் தெரிகிறார்கள்!
நம்மிடம் ஐயா சாமி என்றபடி!
கடனை திருப்பிக்கேட்கிறான்!
நாம் அவனை பிச்சைக்காரனென்கிறோம்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.