யாதுமூரே - வை. அண்ணாஸாமி

Photo by FLY:D on Unsplash

யாதும் ஊரே யாவரும் கேளீரென!
ஓதிய உத்தமர் ஒருங்கே நின்றிட,!
தீதிலா தமிழில் நானும் கலந்தேன்.!
புதிய கவிதை ஒன்றை புனைந்தேன்.!
ஆர்வம் அன்போடு என்னை அழைக்க,!
தீராக் காதல் கொண்டேன் மொழிமேல்;!
பாரினில் கவிஞனென போர்வையோடு நானும்!
தேர்வில் வெற்றி உறுதி கொள்வேன்
வை. அண்ணாஸாமி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.