என் விழியில் விழுந்தவளே!
உன்னைத் துளியும் மறந்தால்
என் துடிப்பும் நின்று விடும்
உன்னுடன் கழியும்
சில மணித்துளிகள்
வானில் பறக்கிறேன்
சிறகில்லாமலே..
என் இரு விழிகளிலும்
கனவுகளை விதைக்கும்
உன் விழிகளுடன்
யுத்தம் செய்தே
எனது இரவுகள் கழிகின்றன..
நீண்டு கொண்டே போகும்
உன் நினைவுகளில்
கால் பதிக்க முடியாமல்
தடுமாறி போவதால்
என் இதயத்தை தீண்டும்
உனது பார்வை ஒன்றை
திருடி கொண்டு
உன் வருகை ஒன்றுக்காக
வாசல் பார்த்தே காத்திருக்கிறேன்

ரமேஷ் பாரதி