மெல்லினம் - புதுவை பாமல்லன்

Photo by Jr Korpa on Unsplash

மெல்லிய மரணம் அரங்கேறும்
மெளன இலக்கிய மன்றம் - காதல்
சத்தமின்றி நிகழுமோர் யுத்தகாண்டம்
சத்தியத்தில் சங்கமிக்கும் உறவுகோலம் - அது
நித்தியத்தில் உறுவாகும் சாமவேதம்
முக்தியினை முன்காட்டும் முழுமைகீதம்

விழிவழி வருதா காதல்
மொழி வழி தருவதா
விழைவு தனில் நுழைவதா
விந்தை நகையினில் மலர்வதா
விழும் சிந்தையில் சிறப்பதா
விளங்காப் பொருளில் புலர்வதா
விளையும் பொழுதே உனையறி
வீழாதென்றும் உண்மைக் காதல்
புதுவை பாமல்லன்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.