கையடக்கக் கவிதை - பனசை நடராஜன்

கையடக்கக் கவிதை - Tamil Poem (தமிழ் கவிதை) by பனசை நடராஜன்

Photo by Vasundhara Srinivas on Unsplash

இறுகிய மனிதரின்
இரும்பொத்த மனத்தையும்
இளகிடச் செய்யும்
மழலையின் சிரிப்பொலி..!

குடும்பத்தில் எல்லொர்க்கும்
குதூகலம் வார்க்கும்,
ஊடலைப் போக்கும்
தவழும் பனித்துளி..

தாயின் நாக்கென்ற
தாலாட்டுக் கிளுகிளுப்பையின்
பாட்டுக்கு மட்டுமே
தூங்கிடும் உயிர்ப்பூ..

வித்தகர்க்கும் விளங்காத
தித்திப்பு மொழி பேசும்
கருத்தாழமிக்க
கையடக்கக் கவிதை..!
- பனசை நடராஜன் (நன்றி : தமிழ் முரசு)
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.