எரியப் போகும் நீதி - சுதா ஆறுமுகம்

எரியப் போகும் நீதி - Tamil Poem (தமிழ் கவிதை) by சுதா ஆறுமுகம்

Photo by Dave Sebele on Unsplash

பேருந்துகளே பீதியடையாதீர்!
பயப்படாதீர்கள்!
இருபது ஆண்டுகளாயிற்று வழக்குத்தொடுத்து!
இன்னும் கொஞ்சமே இருக்கிறது
நீர்க்காமல்!
கோகிலவாணிகளே
கல்லூரிகளுக்குப் போங்கள்!
கோட்டை தெம்பாய்த்தானிருக்கிறது!
ஆடைகளுக்குள் ஆயுதங்கள் தரித்து
அழைய வேண்டிய அவசியமிருக்காது!
அமைதி காத்திடுங்கள்!
பஸ்களும் பயணிகளும் கொளுத்தப்படாமலிருக்க
வழக்குகள் மிக கவனமாக கையாள(ட)ப்பட்டு
தோற்கடிக்கப்படும்.
கவலை வேண்டாம். !
ஏதும் நிகழாது
நிகழ்த்தி விடவும் முடியாது!
ஏனெனில்
இது
காலாவதியானது
நீதி!
இம்முறை எரியப்போவதும்
நீதி !
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.