பெண்ணாக இருந்து பார் - பி. ஜோதி

பெண்ணாக இருந்து பார் - Tamil Poem (தமிழ் கவிதை) by பி. ஜோதி

Photo by Steve Johnson on Unsplash

துள்ளித் திரி வயசுக்கு வா
அம்மாவுக்கு பயப்படு
அடிக்கின்ற காற்றுக்கு
தாவணியைச் சரி செய்
கனவு வளர்
விடலைத் தோழனின் 
பிடி வாதத்துக்குப் பயந்து
ஒரே ஒரு கடிதம் எழுது
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம் 
இளம் பெண்ணாக இருந்து பார்
ஒரு பருவப் பெண்ணின் பெண்மை உனக்குப் புரியும்.
விழித்திரு வீரிட்டு அழு
தாலாட்டுக்கு ஏங்கு
உற்றாரும் பெற்றாரும் 
இல்லை என்று உணர்
ஈ மொய்க்கக் கிட
கிடத்தப் பட்டிருப்பது 
அரசுத் தொட்டில் என்று
அறியாமல் 
அந்த வானம் பார்த்துச் சிரி
நீ ஆணாக இருந்தாலும்
அரை மணி நேரம்
பெண் குழந்தையாக இருந்து பார்.
 
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.