விழி! எழு! தாயே - நா.முத்து நிலவன்

Photo by FLY:D on Unsplash

நா.முத்து நிலவன்- !
இமயத் தலைமுடி நரைத்தஎன் தாயே! !
எத்தனை புகழ்வளர்த்தாயே - உன் !
குமரிக் கால்களில் கொஞ்சும் அலைகளில் !
நெஞ்சினைக் கொள்ளைகொண்டாயே! - முன் !
அமைதியும் அழகும் எங்கு தொலைத்தனை? !
அய்யகோ! இன்றைய நிலவரம்! - மனச் !
சுமையினை எங்குபோய்ச் சொல்லுவேன்? அடடா! !
சூழ்ந்ததே இனமதக் கலவரம்! !
புத்தரும் காந்தியும் போலப் பெரும்புகழ்ப் !
புத்திரர் உனக்கென்ன குறையா? - இனி !
இத்தனைப் பெருமைகள் இருந்தும் உன்பிள்ளைகள் !
இன்னமும் நலிவுறல் முறையா? - மத !
யுத்தமும் சாதியால் ரத்தக் களரியால் !
உயிர்ப்பலி யாவதும் சரியா? -இவை !
ஆத்தனைக் குள்ளுமோர் சுயநலப் பேய்பிடித்(து) !
ஆடுதல் இனியும் காண்கிலையா? !
விடுதலை பெற்றநள்ளிரவிலே மௌனமாய் !
விரதம் இருந்ததேன் காந்தி? - மதப் !
படுகொலை தொடர்வதும் பாரதர் மடிவதும் !
பார்த்துத் தொலைந்ததோ சாந்தி? - இனி !
ஆடுதலும் கெடுதலும் அண்ணனே தம்பியை !
ஆடிப்பதோ இடிப்பதோ தாயே! - ஒரு !
முடிவிலையா?உன் மோனம் கலைந்திடு! !
மூர்க்கமாய் விழி! எழு! தாயே
நா.முத்து நிலவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.