அடியே - முத்துமாறன்

Photo by FLY:D on Unsplash

என் ஆழ்கடலே!
உன் முகத்தின் சுழிப்பை !
என் விழிப்பை தாங்காது.....!
“பிழையில்லா !
இலக்கணம் !
நீ!
உன்னை !
உருவாக்கும் !
இலக்கியம் நான்”!
இரவு முழுக்க!
உன் ஞாபகக் கொசுக்கள்!
என்னை உறங்க விடாமல்!
உருக்குலைத்துப் போடுகிறது!
என் காதல் !
இரட்டை கிளவி..........!
ஒன்றிலிருந்து ஒன்றை!
பிரித்தால் பொருள் தராதாமே!!
உன்னிலிருந்து !
என்னைப் பிரித்தாலும் !
அப்படித்தான் !
நான் பொருளற்றுப் போவேன்....!
உரக்கச் சொல்!
என் விழியை!
உறங்கச்சொல்!
உன் !
நினைவுகளோடே!
நித்திரை கொள்கிறேன்
முத்துமாறன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.