ஒரு துப்புரவு தொழிலாளி மகளின் மனசாட்சி - மு. மணிமேகலை

Photo by Jr Korpa on Unsplash

நான் காலையில் கண் விழித்தால்
அருகில் நீ இருக்கவேண்டுமென்று
ஏங்கி இருக்கிறேன்
நீ எனக்காக உழைக்கப்போகிறாய் என்பதை மற்ந்து

நீ சாலையை துர்ய்மைபடுத்தும் போது
உன்னுடன் பேசினால் அவமானம்
என்று விலகி இருக்கிறேன்
நீ என் அம்மா என்பதையும் மற்ந்து

உன் மீது வீசும் நாற்றத்தை கண்டு
முகம் சுளித்து இருக்கிறேன் என் மீது வீசும்
நறுமணத்திற்கான விலை அதுதான்
என்பதையும் மற்ந்து
நீ அழுக்கு உடையுடன் வலம் போது
நான் உன்னை வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன்
நான் உடுத்தும் ஆடைகளுக்கான மாதிரியே
அதுதான் என்பதையும் மற்ந்து

நீ செய்யும் தொழிலையும், நான் பிறந்த
ச்மூகத்தையும் கேவலம் என்று எண்ணி இருக்கிறேன்
நம் சமூகத்திற்கும் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்ற
எண்ணத்தையும் மற்ந்து
இனியும் மறந்து இருந்தால்
இறந்த உடலுக்கு சம்மாவேன்

நீ கல்பனா சாவ்லாவுக்கு சம்மானவள்
அவள் விண்ணை தொட்டு ஒரு முறை இறந்து விட்டாள்
நீ தினம் தினம் இந்த மண்ணை சுத்தம்
செய்து இறந்து கொண்டிருக்கிறாய்

நீ அன்னை தெரசாவுக்கு சம்மானவள்
அவள் அடுத்தவன் துப்பிய எச்சிலையைதான்
கையில் பெற்றுக் கொண்டாள்
நீ அடுத்தவன் பயன்படுத்திய கழிவறையை
அல்லவா சுத்தம் செய்கிறாய்

இப்படியாக,
உன்னை நினைத்து பெருமைப்பட
பல இருந்தும் மறந்து மரக்கட்டையாக
வாழ்ந்து இருக்கிறேன்

இனி பெருமையோடு உன் மகள் என்று
உரக்க சொல்வேன்
இந்த தரணியிலே
மு. மணிமேகலை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.