ஒற்றைத் தீக்குச்சி - லாவண்யா

ஒற்றைத் தீக்குச்சி - Tamil Poem (தமிழ் கவிதை) by லாவண்யா

Photo by Visax on Unsplash

என்னைச் சுற்றி நிற்கும் காலம்
சுவர்களாய்

இத்தருணம்
விழிகள் இமைகலை
யிழந்ததெபோதென்று
நிர்ணயிக்க முடியவில்லை

சுவாசம் நெருக்குமிரவின் நிசப்தம்
மரவட்டையாய் என்னைச் சுருட்டும்
துயரம் சிகரெட்டின் துணை தேடும்

என்னைப் போல் பெட்டிக்குள்ளிருக்கும்
ஒற்றைத் தீக்குச்சி
எரியும் முகத்தால் சிகரெட்டை முத்தமிடும்
உலைக்கலன் போல் கொதிக்கும்
உயிர்க்கலன்

வாய்வழிபுகை பரத்தும்
சுவற்றில் என் நிழல்
தீய்ந்து போகிற என்னை எனக்குக்
காட்டும்

வேறேதும் செய்யத் தோன்றாமல்
குவளை நீரைக் கொஞ்சம்
கொஞ்சமாயருந்தி
என் நிழல் மீது துப்புகிறேன்
என் மீதும் துப்பிக்கொள்கிறேன்

நட்சத்திரமொன்றிலிருந்து கேட்கிறது
வளையோசை
என் மனைவியின் வளையோசை.
- லாவண்யா (நன்றி : திண்ணை)
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.