யாருமற்ற சமையலறை - கதிரவன்

யாருமற்ற சமையலறை - Tamil Poem (தமிழ் கவிதை) by கதிரவன்

Photo by Zane Lee on Unsplash

பின்னின்று அணைத்து..
காதோரம் கடித்து..
கன்னம் என்னும் வயலில் மூச்சு காற்றை பயிரிட..
விளைந்தது என்னவோ முத்தங்கள் ..
நேர்த்தியாய் தேர்ந்தெடுத்து
கூடை என்னும் சிறை கொண்டு அழைத்துவரப்பட்ட காய்கறிகள் அனைத்தும்
வெட்கம் கொண்டு ,
கண்மூடி ,
விரல்கள் இடுக்கில்
காட்சியை தொடர..
இரு ஜோடி கண்கள் என்னும் அரியணையில் காதல்
தேவன் வீற்றிருக்க ..
தலைப்பாகை என்னும் பாத்திரங்கள் அணிந்த அலமாரிகளில் அணிவகுப்பில் ,
தவறாமல் கலந்து கொண்ட மசாலா டப்பாக்களின் முன்னால்
குப்பை என்னும் பூக்கள் தூவப்பட்ட படுக்கை இல்லா தரையில்..
உருண்டும் ,
பின்பு
புரண்டும் ,
விருப்பத்தினால் ஆக்கப்படும் அறுசுவை உண(ர்)வுகள்.
இவ்வாறே
அரங்கேற்ற விழாவை நடத்தி கொண்டே இருக்கும்
புதுமண தம்பதிகளின்
யாருமற்ற சமையலறை ...
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.