மண்ணிடை இயேசு மறுபடி வருவார் - கண்ணதாசன்

Photo by Sies Kranen on Unsplash

தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே!

சத்திய வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!

எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!

இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!

புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!

விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!

எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவோமே!

- கண்ணதாசன் (இயேசு காவியம்)
கண்ணதாசன்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.