இல்லவை நகுதல் - கி.கண்ணன்

Photo by Jr Korpa on Unsplash

அல்லவை சொல்லல்
ஆனந்தம் கள்ளி

முற்றா இளமுலையார்
உற்று நோக்குவான்

சொல்லாது கைபிடித்து
கட்டிலுக்கழைப்பான்

தப்பென்று விளம்புவோர்
தலையிலடிப்பான்

மடவான்-
செய்யும் செயலோ?

பரத்தைய​ர் இல்லேகி
உறவாடி களிகூர்ந்து

அடங்காத காளையனாய்
மடக்கினான் என்னை

காமமிகுதி-
சுந்தர இதழ் சுவைக்க
கட்டளை இட்டது

கட்டுக் குழையா தளிர்மேனி
கட்டிபிடித்ததில் கரைந்தது

போதுமென்னும் வா​ர்த்தை
இல்லாமல்போய்-
போதலையே என்றது
என்பெண்மை

மென்மை உவமை
திண்மை உண்மை

பேரின்பம் எது?

“கழனி பாய்ந்த
வாய்கால் நீர்
நிரம்பியதும் திரும்பி
கழனி நீர் வாய்கால் வருமே
அதுதான்-

பேரின்பம்
“சமபோகம்” என்பதன்
சாத்திர பெயர்

சிற்றின்பம் எது?

வேர்க்க வே​ர்க்க
காரியம் முடித்து
அவசரத்தில் அணு​சிந்தி
ஓய்ந்து போதல்

இதில்-
இருவருக்கும் திருப்தியின்மை
“ஒருதலையான் காமம்”
திருவள்ளுவர் உரைத்தது
என-
இல்லவைச் ​சொல்லி
நகைத்தாள்

மாலை யணிந்த
மார்பன்

சீர்மல்கும் மதிமுகத்தான்
முறிமேனி

முயங்க மாட்டேன்
எதை இழந்தாலும்
கற்பு இழக்கடமாட்டேன்

பூப் பூத்தால்
கொடிக்கு மதிப்பு

கற்பு-
கன்னிக்கு மதிப்பு

பூ பறித்தால்
வதங்கி போகும்

கற்பு தவறினால்
இ​ழிவு நேரும்

ஆதலின்-
ஊடமாட்டேன்

பூத்தப் பூ
கொய்த முனைந்தால்
மூடமாட்டேன்…

என-
இல்லவைச் சொ​ல்லி நகைத்தாள்

கி.கண்ணன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.