அல்லவை சொல்லல்
ஆனந்தம் கள்ளி
முற்றா இளமுலையார்
உற்று நோக்குவான்
சொல்லாது கைபிடித்து
கட்டிலுக்கழைப்பான்
தப்பென்று விளம்புவோர்
தலையிலடிப்பான்
மடவான்-
செய்யும் செயலோ?
பரத்தையர் இல்லேகி
உறவாடி களிகூர்ந்து
அடங்காத காளையனாய்
மடக்கினான் என்னை
காமமிகுதி-
சுந்தர இதழ் சுவைக்க
கட்டளை இட்டது
கட்டுக் குழையா தளிர்மேனி
கட்டிபிடித்ததில் கரைந்தது
போதுமென்னும் வார்த்தை
இல்லாமல்போய்-
போதலையே என்றது
என்பெண்மை
மென்மை உவமை
திண்மை உண்மை
பேரின்பம் எது?
“கழனி பாய்ந்த
வாய்கால் நீர்
நிரம்பியதும் திரும்பி
கழனி நீர் வாய்கால் வருமே
அதுதான்-
பேரின்பம்
“சமபோகம்” என்பதன்
சாத்திர பெயர்
சிற்றின்பம் எது?
வேர்க்க வேர்க்க
காரியம் முடித்து
அவசரத்தில் அணுசிந்தி
ஓய்ந்து போதல்
இதில்-
இருவருக்கும் திருப்தியின்மை
“ஒருதலையான் காமம்”
திருவள்ளுவர் உரைத்தது
என-
இல்லவைச் சொல்லி
நகைத்தாள்
மாலை யணிந்த
மார்பன்
சீர்மல்கும் மதிமுகத்தான்
முறிமேனி
முயங்க மாட்டேன்
எதை இழந்தாலும்
கற்பு இழக்கடமாட்டேன்
பூப் பூத்தால்
கொடிக்கு மதிப்பு
கற்பு-
கன்னிக்கு மதிப்பு
பூ பறித்தால்
வதங்கி போகும்
கற்பு தவறினால்
இழிவு நேரும்
ஆதலின்-
ஊடமாட்டேன்
பூத்தப் பூ
கொய்த முனைந்தால்
மூடமாட்டேன்…
என-
இல்லவைச் சொல்லி நகைத்தாள்
-

கி.கண்ணன்