கல்வியும், கலவியும் - கேயார்

கல்வியும், கலவியும் - Tamil Poem (தமிழ் கவிதை) by கேயார்

Photo by Austin Chan on Unsplash

கற்க கற்க
முதலுமில்லை, முடிவுமில்லைதான்!

புதிராயும், புதுமையாயும்
இருப்பது எப்போதும் இங்குதான்!

ஒவ்வொரு முறையும்
கற்பதும், கற்பிப்பதும் சுகம்தான்!

நடந்ததை நினைவில் வைத்து,
அசை போடுவதில் என்றும் ஆனந்தம்தான்!

ஒன்றைப் பொதுவில் வைத்து,
ஒன்றை மறைவில் வைத்து
வாழ்தல் முறையாகும்!

மாறாய்க்
கலவியைப் பொதுவிலிட்டு,
கல்வியைக் குடத்திலிட்டு
வாழ்தல் பிழையாகும்!
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.