இயலாமை - இரா. பி

Photo by Pawel Czerwinski on Unsplash

கண் முன்னே கொடூரங்கள்!
அன்றாட வாழ்வில் அத்தியாயமாகி!
இயலாமை எனும் அரணின் பின் மறைந்து!
இரக்கம் ஒரு சொல்லாக!
நீதி ஒரு துணுக்காக!
மனிதம் ஒரு புறம்; மனிதன் மற்றொரு புறம் !
காலத்தின் போக்கில் வாழ்வைக் களித்து!
அநீதி கண்டு பொங்கி எழுவது அநீதி என்று!
நீதி அளக்கும் தராசில்!
ஒரு புறம் கனம்; மறுபுறம் கனக்கும் மனம் !
எப்போதாவது என ஒரு சொல் சாபத்துடன்!
வாழ்வில் முற்றுப்புள்ளி அற்று!
தொடரும் பல சாபங்கள்!
இயலாமைதான் வாழ்க்கையோ?!
இரா. பி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.