உணர்ச்சிக் கவிஞர்! !
வாழியவே நீடுழி !! !
!
வடு சுறணையற்று சுருண்டு படுத்த தமிழனை !
நெருப்பாகி எழ வைத்த வல்லமைக் கவியே ! !
சும்மா இருந்தால் வருமா ஈழம் !
எருவாகி வாடா தமிழா என்றவனே ! !
உன் பாடல் கேட்டுத் தான் - எம் !
உதிரத்திற்கு உணர்வு வந்தது !
உன் மொழி கேட்டுத் தானே எமக்குள் !
எழுச்சி பிறந்தது !
பைந்தமிழில் நல்ல பா தந்த கவியே ! !
பாரினில் புலம்விட்டு நாம் வாழ்ந்திட்ட போதிலும் - நின் !
பாட்டாலே தமிழன் முகவரி சொன்னோம் !
புலிகளும் இந்நாளில் இல்லையெனில் மண்ணில் !
எலிகளும் தின்னும் இத் தமிழினத்தை என்று !
தீர்க்க தரிசனம் தந்தவனே உன் !
வாய்மை பலித்தது எம் மண்ணில் ! !
அகிலமும் வாழ்த்தும், முத்தமிழும் வாழ்த்தும் !
இனமும் நினை வாழ்த்தும் !
உனைப் புலிகளும் வாழ்த்துவர் இந்நாளில் ! !
வாழ்க கவியே வளமுடன் நீடுழி ! !
வாழ்க வாழ்கவே ! !
கனடாவிலிருந்து இளவரசன் !
!
(சித்திரைத் திங்களில் பிறந்த எங்கள் உணர்ச்சிக் கவிக்கு புலம் பெயர்ந்த தமிழினம் தங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றோம்)

இளவரசன்