அன்னமே,
உன் பார்வை
கொள்ளை கொண்டதே
என்னையே
செல்லமே,
உன் மழலை
தென்றலாய் என் நெஞ்சிலே
பஞ்சு போன்ற பாதத்தில்
தஞ்சம் கேட்டு ஓடி வந்து
தாயின் மடிப்புகுந்து
சிரிப்பாய்
வானமே உன்னைத் தாலாட்ட
ஆனந்தமாய் கண்மூடிக்கொள்
முத்து முத்தாய் முத்தம்
நீ
முகத்தில் தந்தாய் நித்தம்
தித்திக்க தித்திக்க நீ பேச
கன்னக்குழி இரண்டும்
கதைகள் பல பேசும்.
சொன்னச் சொல்லை
மீண்டும் நீ சொல்ல
உன் கண்கள் கூட கவி பாடும்
தங்க நிலவே
இன்றுபோல் என்றும் நீ
தேன் சிந்து
என் வாழ்க்கையில்

அபிசேகா