தனிமை என்னும் காட்டில்....
பயம் என்னும் இருளில்....
உறக்கமில்லா இரவுகள் கழிய....
எதையோ தேடுது விழிகள்....
வழிகளுண்டு வெளியே செல்ல....
இருந்தும் வலிகள் உள்ளே மெல்ல கொல்ல...
நடக்க மறுக்குது கால்கள்....
ஆயிரம் உண்டு வெளியே சொல்ல....
அத்தனையும் மனதிற்குள் போட்டு மெல்ல....
மௌனம் என்னும் மொழியில் காலம் செல்கிறது...
அலையடிக்கும் நெஞ்சம்....
தனிமையே வேண்டாம் எனக் கெஞ்சும்....
கடைசியில் வெறுமையே மிஞ்சும்.....
தூர தெரிகிறது ஒற்றை நிலவு....
அதையும் உறவாட மேகங்கள் உண்டு....
நட்சத்திரங்களின் கூட்டம் பார்த்து...
கிணற்றுத் தவளை மனமிதோ பிதற்றிக்கொள்கிறது....
காட்டு வெள்ளம் கரை புரண்டோட...
அதில் ஒரு ஓடம் சுழன்று செல்ல....
ஓடம் போல் மனமோ பரிதவிக்கிறது.....
சுற்றி எங்கிலும் பூந்தோட்டம் இருந்தும்....
கள்ளிச்செடி மேல் காதல் கொண்டு...
முட்களின் மேல் துயில் கொள்கிறது வண்ணத்திப்பூச்சி....
மழை காணாபயிர் போல மனம் இங்கு வாட......
இறக்கை இல்லாத பறவை போல வாழ்க்கை முடங்க....
காற்றுகூட கணக்கிறது...
கண்ணீர் வர மறுக்கிறது.....
குடம் குடமாய் தண்ணீர் ஊற்றியும்
பட்டமரம் தளிர்ப்பதில்லை...
கொம்புத் தேன் குடம் இருந்தும்
சர்க்கரை நோயாளிக்கு பயனில்லை.....
காலம் மெல்ல மாறலாம்...
கவலைகள் கடந்து போகலாம்....
வலிகளும் கூட ஆறலாம்...
ஆனால்,
நினைவுகள் என்றும் மாறாது... மாறாது.... மாறாது....

அந்தோணி ரெனிஸ்டன்