அழகிய நாட்கள் - அன்னபூர்ணா

Photo by Brian Kyed on Unsplash

வெள்ளிக்கிழமை மாலை
பள்ளியின் கடைசி வகுப்பு
லேசான தூரல்
அடுத்தநாள் சனிக்கிழமை என விடுமுறை குதூகலம்

அப்பொழுதெல்லாம் முதுகில் பாரம் இருக்கும்
இப்பொழுது போல் மனதில் அல்ல

வீட்டிற்கு வந்தவுடன் பாரத்தை இறக்கி ஓரமாய் வைத்துவிட்டு
முகம் கழுவி உடைமாற்றி வர
அவனுக்கு புடிக்கும் என சூடாக சாம்பார் சாதமும் வடகமும் செய்து வைத்திருப்பாள் அம்மா

தொலைக்காட்சியில் அந்நேரம் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டு
சிரிப்புடன் சாப்பிட

கடைசி வாய் சத்து என மீதம் வைக்காமல்
அனைத்தையும் சாபிடவனின் தட்டில் வடகம் மீதமிருந்தது

வடகத்திர்க்காக சிறிது சாதம் வைக்கிறேன் என அம்மா வைக்க
இன்னும் ஒரு வாய் சாதம் அதிகமாய் உள்ளே போனது

அவசரமாய் எழுந்து கைகழுவி
விளையாட செல்கிறேன் என்று ஓடியவனை

சாப்பிட்டவுடன் இனிப்பு கேட்பான் என
பதம் பார்த்து செய்த ரவாலட்டு
சிறிது நேரம் அமர வைத்தது

அதற்குள் அவன் பெயற்சொல்லி நண்பர்கள் அழைக்க
அவர்களுக்கும் சேர்த்து சில லட்டுக்களை
கை எடுத்துக்கொண்டு கால்கள் ஓடியது

அதனை நண்பர்களிடம் கொடுக்க ஆசையாய் சாப்பிட்டு
மழைத்தூரலில் நனைந்தபடியே
ஆனந்த விளையாட்டு

நாட்கள் அழகாய் இருந்தது அந்த வயதில்...
அன்னபூர்ணா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.