எங்கிருந்தோ வந்தாள் - அகணி

எங்கிருந்தோ வந்தாள் - Tamil Poem (தமிழ் கவிதை) by அகணி

Photo by Tengyart on Unsplash

மல்லிகைப் பூவற்ற பூந்தோட்டத்தில்!
மல்லிகை வாசத்தை தாங்கி வந்தாள்!
இவனுக்காய் காத்திருக்கும்!
இடைஞ்சல் இல்லையென்ற உணர்வை!
சுந்தரியின் சிரிப்பழகு!
சொல்லிக் கொண்டது!
இவளுக்காய் காத்திருந்ததில்!
எனக்கும் ஓர் இன்பம் இருந்தது!
இவள் நடையை பார்த்து ரசிக்க!
எனக்கு கிடைத்த பலனே அது!
நிறையவே பேசினோம்!
நீண்ட நேரம் காதலும் செய்தோம்!
சின்ன சண்டைகள்!
நேரத்தைக் கொன்றன!
மாலையாகி மதியும் தோன்றினன்!
மனமற்று மெல்லப் பிரிந்தோம்!
காதல் சவாரியை நினைத்துக்!
களிப்புறத் துடிக்கையில்!
கற்பனைக் குதிரையின்!
கனைப்புக் கேட்டது!
குதிரைக் கடிவாளத்தை மெல்லப்பிடித்து!
கீழே இறங்கி மெல்ல நடந்தேன்!
இன்றைய சவாரி இத்துடன் போதுமென
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.