பூக்களை மட்டுமே யாசிக்கிறது - அக்மல் ஜஹான்

Photo by engin akyurt on Unsplash

பூக்களை பரிசளிக்கிறது!
வாழ்க்கை..!
சிலநேரம்!
பூக்களை பறித்தெடுக்கிறது!
பதறப் பதற..!
விதைகளாய் விழுந்து !
பூக்களாய் மலர்கிறது !
சொல்லாமல் கொள்ளாமல்...!
புயலுமின்றி !
மழையுமின்றி!
மரங்களை சாய்த்து!
மண்ணோடு மண்ணாக்குகிறது!
நந்தவனத்தின் கனவுகளை..!
என்றோ ஓர் நாள்!
எல்லாப்பூக்களும்!
உதிர்ந்து விழும்..!
ஒரு கோடி துயர் விதைத்து..!!
என்றாலும்!
பூக்களை மட்டுமே யாசிக்கிறது..!
எப்போதும்!
ஆசைப்பட மட்டுமே!
பழகிப்போன!
மனசு
அக்மல் ஜஹான்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.