அன்பைத்தேடி - ஆதித்தியன்

அன்பைத்தேடி - Tamil Poem (தமிழ் கவிதை) by ஆதித்தியன்

Photo by FLY:D on Unsplash

ஒரே ஒரு மகன்!
வீட்டைத்தவிர அணைத்தையும் விற்று!
விருப்பப்படியே படிக்கவைத்தோம்…!
!
இன்று…!
வெளியூரில் அவன் பெரிய மருத்துவன்!
உள்ளூரில் நாங்கள் உழைத்துத்தேய்ந்து!
நோயாளிகளாய்…!!
முதல் தேதியில்!
ணம் மட்டும் மணியாடர்!
மூன்று மாத்ததிற்க்கு ஒருமுறை!
மருந்து மாத்திரை பார்சலிலே..!!
நலம்,நலமா?!
உயிரற்ற எழுத்துக்களை உடலில் தாங்கி!
அவ்வப்போது கடிதங்கள் ..!!
அவன்,!
அங்கு நவீன மருத்துவன்!
நாங்கள் இங்கு,!
நாடி மருத்துவனிடம்..!!
!
இறுதி நாட்களை கழிப்போம் மகனிடம்!
என்று நாங்களும் புறப்பட்டோம்!
முறுக்கு வத்தல் வகைகள் அடங்கிய!
கோணிப்பையுடன் குதூகலமாய்…!
வாங்க நலமா?!
என்ன திடீரென?!
இரண்டே வார்த்தைகள்!
எங்கோ கிளம்பினான்.!
நாங்கள்!
உழைத்து தேய்ந்தவர் என்பதனால்!
ஒடிந்தவை தேய்ந்தவை போடும் அறையை!
ஒதுக்கித்தந்தாள் மருமகளும்.!
!
மாலையில் வந்த அன்பு மகன்!
தேவையை மட்டும் சொல்லுங்கள் என!
அறைக்குள்ளேயே சிறைவைத்தான்.!
குடும்பத்துடன் அவர்கள்!
வெளியே செல்கையில்!
காவல் நாய்களாய் நாங்கள் இருவரும்..!!
உணவு உடை எல்லாம் கிடைத்தது!
உண்மை அன்பின் முகவரி கிடைக்கல…!
போலி அன்பின் வெம்மை தாங்காது..!
இதோ…!
புறப்பட்டு விட்டோம்!
கிராமத்தை நோக்கி…!!
!
நாளை என் மகனும்!
அன்பைத்தேடுவான்!
அவன் மகனும்….!
படிக்கிறான் ‘அமெரிக்காவிலே’!! !
!
-கவிஞர் ஆதித்தியன்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.