கல்லறை நினைவுகள் - ஆர். நிர்ஷன்

Photo by Jan Huber on Unsplash

அதிகாலை மல்லிகையை!
பறித்துவந்து!
அதில் வழிந்த!
சொட்டுப் பனித்துளியை!
நுனிவிரலில் ஏந்தி!
இனிக்கிறது தேன் !
என்று சொன்ன!
அந்த நாள்…!
ரயில் பாதையில்!
நான்!
ஓடி விழுந்தபோது!
உன் கைக்குட்டையில்!
எச்சில் தடவி!
ஒத்தடம் கொடுத்த!
நாள்…!
கரப்பானுக்கு பயந்து!
கூரையில் ஏறி!
தவறி விழுந்ததாய்!
நீ கண்ட கனவை!
நள்ளிரவில் !
தொலைபேசியில் கூறி!
என் கனவை!
கலைத்த நாள்…..!
யாரோ ஒருவன்!
வீதியில் இறந்துகிடக்க!
அருகில் அவன் மனைவி!
அழுவதைப்பார்த்து!
என்னைக்கட்டிப்பிடித்து!
எப்போதும் என்னுடன் இருப்பாயா!
என ஏக்கத்துடன் !
கேட்ட நாள்…!
மாமாவுடன் பேசியபொழுது!
இடையில் என்பெயரைக் கூறி!
நீ தடுமாறித் தவித்ததை!
அதே பயத்துடன்!
மழலை மொழியில்!
கூறிய நாள்…!
நகம்கடிக்கும் பழக்கத்தை!
விடச்சொல்லி !
நீ விரல்கடித்துக்கொண்டு!
அழுதுத் துடித்த!
அந்த நாள்…!
எப்போதோ நாம்!
ஒன்றாய் பயணித்த!
பயணச்சீட்டை!
பத்திரப்படுத்தி!
அடுத்தவருடம்!
அதே தினத்தில் !
முத்தம்கொடுத்தாயே!
அந்த நாள்…!
இவை அத்தனையும்..!
ஏன் !
இன்னும் எத்தனையோ!
நினைவுகளை !
நான்!
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்….!
யாரோ வைத்த !
கண்ணிவெடியில் - நீ !
கண்ணிமைக்கும் நேரத்தில்!
சிதறிப்போனதைத் தவிர….!
இன்னும் !
என்றும் உன்!
கல்லறையில்….!
-ஆர். நிர்ஷன்
ஆர். நிர்ஷன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.