அமைதியாக இருந்த பொழுதுகள்!
அதிர்ந்து போனது -!
நிலத்தில் திடீரென மாற்றம்!
களத்தினில்!
கடும் சமராம்....!
நெஞ்சுக்குள் ஒரே!
ஓயாத படபடப்பு!
நித்தம் குண்டுகளின் சத்தம்!
நிம்மதியை தொலைக்கும்!
உயிர்மையின் குரல்கள்!
விடிவை நோக்கி விரையும்!
பாய்ந்திடும் தோட்டா!
மாய்ந்திடும் உயிர்கள்!
துண்டாடும் உடல்கள்!
துர்நாற்றம் வீசும்!
வீதிகளில் இரத்த வெள்ளம்!
வெள்ளோட்டம் செய்யும்!
தூக்கங்களே இல்லாத!
துயரங்கள் வாட்டும்!
தற்சமயம் கண் அயர்ந்தால்!
கனவுகளுக்குள்ளும்!
குண்டுகள் வந்து வீழும்

ஆனந்தத்தில் ஒரு அனல்