அந்நியர்கள் உள்ளே வரலாம் - யுகபாரதி

அந்நியர்கள் உள்ளே வரலாம் - Tamil Poem (தமிழ் கவிதை) by யுகபாரதி

Photo by Jr Korpa on Unsplash

என்னென்ன பேசுவதென்று
இருவருமே ஒத்திகை
நடத்திக் கொண்டே
என் வீட்டுக்குப் போகிறோம்...

அதிர்ச்சி தொனிக்காத
முகத்தோடு கதவு திறக்கிறாள்
அம்மா...

வார்த்தையைத் தொலைத்த
வைராக்கியத்தில்
அதிர்ந்து பேசும் அப்பாவோடு
அத்தனை கண்களும்
மௌனங்களால்பேசிக் கொண்டன.

ஒரு மிகப் பெரிய
புயலுக்கு பின்னான
அமைதியோடு
நீ பேசத் தொடங்குகிறாய்...

ஒவ்வொரு சொற்களிலும்
உன்னை நிரூபிக்க
நீ படும் பாட்டை
லேசான கர்வத்துடன்
ரசிக்கிறேன்.

சட்டென்று விடை பெறும்
தருணத்தில்
"வழி அனுப்பி விட்டு வா" என்ற
அம்மாவின் நாகரீகமும்

யாருக்கும் தெரியாமல்
"அண்ணி" என்றழைக்க
மறக்காத தம்பியின் சமயோசிதமும்
அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

நீ கொடுத்து வைத்தவள் தான்
என்னிடம் மட்டுமல்ல
எல்லோரிடமும்தான்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.