என்காதல் என்னவென்று - விவிக்தா

Photo by Jr Korpa on Unsplash

காதலெனும் தூரிகை எடுத்து
உன் மல்லிகைப் பூ மனதைத் தொட்டு
வர்ணக் குழம்புகளாய்
வரைந்து வைத்ததெல்லாம்
காகிதப்பரப்பில்
வெறும் நிழற்படங்கள் அல்ல - என்
இதயப்பரப்பில்
உன் பாதத் தடங்கள்.

காதலெனும் களிமண் குழைத்து
கண்ணீர் துளிகளை முத்தாய் இழைத்து
கட்டியெழுப்பிய
காதல் மாளிகை
உளிகொண்டு செதுக்கிய
சிற்பங்களாய் அல்ல - தமிழ்
மொழி கொண்டு செதுக்கிய
கவிதைகளாய்!

காதலெனும் வானவில் வளைத்து
வானத்து மீன்களையும் வரவழைத்து
உன் நாணத்தில் தோய்த்து
கயிறாகத் திரித்ததெல்லாம்
நீட்டிய கழுத்தில்
மாலைகளாய் அல்ல - வீணையில்
மீட்டிய ராகங்களின்
சோலைகளாய்
விவிக்தா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.