காணும் கடவுள்கள் - வி பிட்சுமணி

Photo by Visax on Unsplash

தொட்டில் சேலையை விலக்கி
கன்னத்தில் ஒருவிரல் வைத்துறங்கும்
மகளை பார்த்து கொண்டிருந்தேன்

தூங்கிற பிள்ளையை பார்க்காதே
என்றாள் அம்மா

திடீரென தூக்கத்தில்  சிரித்தாள்
கடவுள் வந்து  சிரிக்க வைக்கிறார்
என்றாள் அம்மா

திடுக்கென்று  அழுது தூங்கினாள்
காத்து கருப்பு  பயம் காட்டுகிதென
தொட்டிலின் கீழ் இரும்புதுண்டை
வைத்தாள் அம்மா

மீண்டும் என்  மகள் அழ
அடுக்களையிலிருந்து  ஓடிவந்து
கச்சை பால் கொடுத்தாள்
என் மகளின் அம்மா
வி பிட்சுமணி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.