காதலுடன் காத்திருப்பேன் - தமிழ்மணி மாணிக்கம்

காதலுடன் காத்திருப்பேன் - Tamil Poem (தமிழ் கவிதை) by தமிழ்மணி மாணிக்கம்

Photo by Raimond Klavins on Unsplash

எந்தனை ஆண்டுகள்
எந்தன் உயிர் உனை பார்த்தது
இத்தனை ஆண்டுகளில்
எத்தனை முகங்கள் இடை வந்தன
எத்தனை முகங்கள் கதை பேசின
அதில் சில அழகிகளும் உண்டு
சில அசிங்கங்களும் உண்டு
ஆனால்
என் இதயத்தில் உருவாய்
ஓர் ஓரத்தில் உயிர் தாங்கும் கருவாய்
நினைவுகளின் எச்சம் மட்டும்
விழுங்கி உயிர்திருக்கும் - நீ
நீ மட்டும் மறைவதே இல்லை
இல்லை... இல்லை....
நான் மறப்பதே இல்லை
உண்மையில் ஐந்தோ, ஆறோ,
நான் பேசிய வார்த்தைகள்
உன்னிடம்
ஆனால் கனவிலோ
கதையாகவும்
கவிதையாகவும் பேசியன
ஆயிரம் ஆயிரம்
இது நான் கொண்ட இனக்கவர்ச்சியல்ல
உன் மேல் கொண்ட மனக்கவர்ச்சி
இடைப்பட்ட ஆண்டுகளில் நீ
எதிர்பட்டது ஒரு முறை
அந்த ஒரு முறையில்
நான்
மறுமுறை பிறந்தேன்
சொல்லாமல் விட்டுவிட்டால்
செல்லாதே எனது காதல்
போதும் ...
காதலோடு காத்திருந்த காலம் போதும்
கவிதைகளோடு வாழ்ந்திருந்த காலம் போதும்
காதல் கவிதையே !
உன்னோடு வாழும் காலம் வேண்டும்
உன்னிடம் சொல்லிவிடலாம்
உன் காதலை அள்ளிவிடலாம் - என்று
அன்புடன் அருகில் வந்தேன்
ஆனால்
உன் அன்னிய பார்வையில் என் ஆயுளையே
முடித்துவிட்டாயடி பெண்ணே
ஆயினும்
ஆண்டுகள் பல ஆயினும்
என் உயிர் என்னை விட்டு போகினும்
உதிரும் ஒவ்வொரு துளி சாம்பலாக
காற்றில் கலந்து காத்திருப்பேன்
காதலுடன் காத்திருப்பேன்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.