காலையில் உன் கனவு
கலைக்கும் சூரியன்
இடைவிடாது உன் மடியில்
தவழும் மேகக்கூட்டம்
உன் அழகு கெடுக்கும் கருமேகம்
சில சமயம் உன்னுள்
மின்சாரம் பாய்ச்சும் மின்னல்
முட்டி மோதி உன்னை
பிளக்க செய்து
பூமிக்கு மழைக்குழந்தை
வரவை சொல்லும் இடி
என்று எத்தனையோ இடர்கள்
உன்னுள் ஜாலம் போட்டாலும்
மாலையில் உன் இன்முகக்
காட்சி விடுப்பு எடுப்பதில்லையே!

புவனா பாலா