ஆறு வரி கவிதை - ருசோ தெனிஸ்

Photo by Rahul Himkar on Unsplash

இலக்கியம் பல படித்து
இரவு பல வழித்து
கவிதை பல படைக்கிறேன்...ஆனாலும்
தொலைபேசியில் நீ சொல்லும்
.ம்.. என்பதற்கு ஈடான
கவிதை என்னிடம் இல்லை.


இனிக்க இனிக்க உன்
நினைவுகளை குடித்துக் கொண்டே
இருப்பதால்...
சர்க்கரை வியாதி வந்துவிடுமோ
என்ற பயம் எனக்கு.


இரண்டு வரி கவிதை சொன்னால்
நான்கு முறை வெட்கப் படுகிறாய்
ஆக மொத்தம் எனக்கு
ஆறு வரி கவிதை.


ருசோ தெனிஸ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.