அரிதாரம் - பி. முரளி

Photo by Paweł Czerwiński on Unsplash

அன்றாட வாழ்க்கையின் !
அத்தியாயங்களுக்கு !
அழகூட்ட முயன்று !
அரிதாரம் பூசிப்பூசி !
வெறுத்துவிட்ட !
வறண்ட உதடுகளுக்கு !
தவணை முறையில் !
செயற்கையாய் !
உயிரெனும் !
செரிவூட்டப்படுகின்றது...... !
காற்றின் எதிர்திசைப்பறவையாய் !
இறுகிய மனதும் !
தளர் நடையுமாய் !
வழியில் வரும் !
பரிட்சயமானவர்களின் !
புன்னகைக்குத் திணறும் !
உதடுகள் !
உதிர்த்துவிட்டுச்செல்லும் !
ஒப்புக்கொன்றை..... !
அதிகார வர்க்கத்தின் !
புரிதலின் அலைவரிசையில் !
அவசரமாய் !
தவறி வரும் வார்த்தைகள் !
இதயம் கிழித்து !
உதிரம் பருக !
இயலாமையின் விளிம்பில் !
ஒளிப்படக்கருவியின் முன் நிற்கும் !
செயற்கை புன்னகையாய் !
அலுத்து விடுகின்றது !
அலுவலக வாழ்க்கை !
சில தனிமைகள் !
சில மௌனங்களென !
இதயத்தாடையில் !
மென்று துப்பும் !
கசப்பான உணர்வுகளில் !
அவசியமற்ற !
போலிப்புன்னகைகளிலிருந்து !
விடுவித்துக்கொள்ள !
ஒரு வேளை !
விலங்கினமாய் பிறந்திருந்தால் !
சிறப்பாய் இருந்திருக்குமென்று !
தோன்றும் தருணங்களில் !
நிலவொளியை உள்ளங்கையில் !
அள்ளி உயர்த்திப்பிடித்து !
சிதறடிக்கும் அரிதாரத்தின் !
அர்த்தம் தெரியாத !
மழலைச்சிரிப்பு !
தெளிந்த பிரவாகமாய் !
நம் மனசுக்குள் !
சிதிலமடைந்த உணர்வுகளின் !
சாம்பலில் !
சில்லென்றதொரு !
கவிதை எழுதிச்செல்லும்
பி. முரளி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.