விருப்பமின்றியே வந்து ஒட்டிக் கொள்கிறது நிழல்! - ப. மதியழகன்

Photo by Tengyart on Unsplash

விடைபெறும் நேரம் வரும்வரை!
உன் பிரிவைப் பற்றி!
நினைக்கவே இல்லை!
ஏகாந்தமாய் வாழ்ந்தவனின்!
வயிறு பசி என்பதை அறியாது!
குறிப்பிட்ட நபர்களை!
எதிர்கொள்ளும் போது!
என்ன செய்வது என்று தெரியாமல்!
சிலை போல் நின்று விடுகிறேன்!
வெளிப்படுத்தப்படாத எண்ணகளை!
சுமை தாங்கி போல் முதுகில்!
சுமந்து செல்கிறேன்!
உங்கள் விருப்பமின்றியே!
வந்து ஒட்டிக் கொள்கிறது!
நிழல்!
நிறபேதம் காட்டும் சமூகம்!
மேனியை சிவப்பாக மாற்ற!
க்ரீம்களை பரிந்துரைக்கிறது!
அச்சுறுத்தலுக்கு மத்தியில்!
உண்மை பேசுவது!
தற்கொலைக்குச் சமமானது.!
ப. மதியழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.