மீண்டும் பேரலை - மாவலன்

மீண்டும் பேரலை - Tamil Poem (தமிழ் கவிதை) by மாவலன்

Photo by Henrique Hanemann on Unsplash

மரணம் விதைக்கப்பட்ட
வன்னி வள நாட்டில்
காட்டாறாய் செங்குருதி

மண்டை ஓடுகள்
ஒதுங்கிப் பிணைந்து
நதியில் விழுகின்றது!

குண்டுகள் துளைத்த
பதுங்கு குழிகளிலிருந்து
பீறுட்டுப் பாய்கின்றது
விதைப்புக்காய்க் காத்திருந்த
மண்டை ஓடுகள்!

நதியும் ஆறும்
கலந்தே வீழ்கின்றது
இந்து மா கடலில்!

தொலைவிலிருந்து சில
புலம்பல்களும் ஓலங்களும்
பெரிதாக ஓலிக்கின்றது.

உலகச் செவிப்பறைகளின்
கதவுகள் அடைப்பட்டே
கிடக்கின்றது
ஈழத்தமிழரின்
சுதந்திரத்தைப் போல்
இறைமையைப் போல்
உரிமையைப் போல்

ஆயினும்
இந்து மா கடல்
மண்டைகளையும்
முண்டங்களையும்
விழுங்கி விழுங்கி
பேரலையாய்
உயர்ந்து உயர்ந்து
உக்கிரம் கொள்கின்றது
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.