எப்படி சொல்லுவேன் - லக்ஷ்மண் பிரபா

Photo by Alexander Grey on Unsplash

ஆறு மாதங்கள் கண் இமைப்பதற்குள்
கடந்தன என சுற்றம் சொல்ல
எனக்கு அது ஆறு வருடம் போல்
ஊர்ந்ததை எப்படி சொல்லுவேன்

அனைவரையும் சேர்த்துவெச்ச அழகுநாச்சி நம்மை
ஆறு மாசம் பிரிச்ச கோவம்
இன்னும் எனக்கிருக்குனு, எப்படி சொல்லுவேன்

நேருல பாக்கல, கடிதமும் பகிரல
உன் குரல் கூட கேட்டதில்ல,
உன் மீது காதல் வசப்பட்டேனு, எப்படி சொல்லுவேன்

பரிசம் போடல , மெட்டி மாட்டல,
தாலி இன்னும் ஏறல, என் மனக்கூட்டில்
நீ கணவனான கதை
எப்படிடா வெளியே சொல்லுவேன் ???
லக்ஷ்மண் பிரபா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.