காற்றின் விரல்கள் - கோகுலகண்ணன்

காற்றின் விரல்கள் - Tamil Poem (தமிழ் கவிதை) by கோகுலகண்ணன்

Photo by Jr Korpa on Unsplash

முடிவற்ற பிரயத்தனமாய்
எல்லையில்லா ஓவியத்தை
அழித்தழித்தழித்தழித்தெழுதும்
பாலை மணற்படுகையில்

ஆசுவாச மீன்கள்
திடுக்கிட்டு திசைதொலைய
அலையும் வளையங்களால்
அசைக்கும் விளையாட்டில்

ரகசிய மெளனம் சேகரித்து
நிழலிருட்டில் ஒடுங்கும் மரங்கள்
தோல்வியுற்று கலைகயில்

கோளத்தின் நீளம் மீறும்
காற்றின் ஓயாத விரல்கள்
காண நேர்ந்தது
ஒரு பொழுதில்.
புல்லரித்துபோனேன்

கரம்பற்றி என்னை
அழைத்து சென்றது யார்
என்று அப்புறம் யோசித்தேன்
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.