தியாகத் திருநாள் - கிளியனூர் இஸ்மத் துபாய்

Photo by Tengyart on Unsplash

நபி இபுராஹிமுக்கு!
நழுவிப்போன நனவில்!
அவரைத் தழுவிக் கொண்டது!
நான்-என்ற எண்ணம்…!
தவமிருந்து தரித்த தனையனை!
தத்துவமறந்து தழுவியதால்!
அல்லாஹ; ஆணையிட்டான்!
அறுத்து விடு….!
அவரின்!
ஏக உள்ளமையில்!
ஏற்பட்ட தடுமாற்றம்!
பெற்றபாசம்!
படைத்தவனை!
எண்ணத்திலிருந்து!
பாலையாக்கியது…!
நான்-என்ற சுயநலத்தை!
தியாகம் செய்து!
நாம் என்ற சுயத்தை!
அருந்த வேண்டிய ஆணை…!
இருப்பதும் இல்லாமையும்!
இறையாகும் போது!
அறுப்பதும் அறுக்கப்படுவம்!
வேறாகுவதில்லை….!
அறுப்பது நானாகஇருந்தாலும்!
அறுக்கப்படுவதில்!
நான் இருக்கவேண்டும்!
அதுதான்!
குர்பான்…!
இது தீர்க்கதரிசிக்கு!
இறைவன் தந்த தீர்ப்புமட்டுமல்ல!
தீனோருக்கு இட்ட கட்டளை….!
-கிளியனூர் இஸ்மத்
கிளியனூர் இஸ்மத் துபாய்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.