எங்கே சென்றாய் ? தனிமையில் நான் இங்கே - ஜெயந்த் கிருஷ்ணா

Photo by Joel Filipe on Unsplash

தூரமாகிறாயா இல்லை
மறைகிறாயா
என்னை தனியாக விட்டு
போகிறாயா.

எதற்காக நாம்
சேர்ந்தோம்?
எதற்காக நாம்
பிரிகிறோம்?

அந்த கண்கள்
அந்த புன்சிரிப்புகள் என்றும்
என் மனச்சிறையில்

தெரியாமல் தேடுகிறேன் என்றும்
காதலாய் நீ
என் அருகிலிருந்தாலும்.

எங்கே மறைந்தாய் நீ
ஒரு வார்த்தை கூட சொல்லாமல்
தூரமாய்.

காண்கிறேன் உன் முகம்
கேட்கிறேன் உன் குரல்
இடறாமல் பதறாமல் என்றும்.

தேவதையாய் நீ
வரும் நாள் பார்த்து
தனிமையில் நான் இங்கே
ஜெயந்த் கிருஷ்ணா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.