அன்றும் இன்றும் - இரா.சுஜீவன்

அன்றும் இன்றும் - Tamil Poem (தமிழ் கவிதை) by இரா.சுஜீவன்

Photo by Visax on Unsplash

நடுநிசி் நேரம்
களிமண் வீடு கிடுகுக்கூரை
இடியில்லை மின்னல் வெட்ட
மழை பெரிதாயில்லை
ஆனாலும் தூவானக்குளிர்
தம்பி தங்கைகள் ஒற்றை அறை வீட்டுக்குள்ளே
விறாந்தையில் ஓலைப்பாயின் கதகதப்பில்
நானும் தாயும் காவலுக்கு

எங்கோ தூரத்தில் நாய் ஒன்று
குரைக்க தூக்கம் கலைந்து பயம் நெஞ்சை இறுக்க
உக்கிப்போன பனைஓலை வேலி பேருக்கு
ஓட்டை வேலியை ஏசியபடி வெளியே நோட்டமிட
காலடிச்சத்தம் நன்றாகவே கேட்கிறது கூடவே
மெலிதான உரையாடல் ஒழுங்கையில்
கறுத்த உருவம் வெட்டும் மின்னலில்
வேலிக்கு மேல் தெரிகிறது

பின் வளவில் பனைமரங்கள் காற்றில் ஆட வெள்ளையன் ஒங்கி குரைக்க
அவ்வுருவம் நகர்கின்றது
தொடர்ந்து ஐந்து உருவங்கள்
மறைந்து போக பனைகளை நினைத்தபடி
தூங்கிபோனேன்

விடிகாலை கரித்தூளால் பல்துலக்கிகொண்டு
மட்டை படலையை காலால் தள்ளி
வேலியோரமாய் நடக்கின்றேன் எதையோ தேடி
கிடைத்துவிட்டது ஈரமண்ணில் அழுந்தி மழைத்தூறலில் சிதைந்த உன் காலணியின் தடங்கள் .............. நீ தான்
இன்று புன்னகைத்துவிட்டு செல்கிறாய்
அன்றும் எனைப்பார்த்து ...............?
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.