காய்ந்த சருகுகளுக்கு நடுவில்
துளிர் விட்ட
சின்னத் தளிர் போல
மண்ணில் மனிதம்
மரணிக்க காத்திருக்கின்றது
நடுக்காட்டில்
தனித்து நிற்கும்
ஒற்றை ரோஜா
காற்றின் தாக்குதல்
தாங்க முடியாமல்
தவிப்பது போல
சில உணர்வுகள்
உயிரைக் கொல்கின்றன
மௌன வலிகள்
புரிந்துணர்வெனும்
மருந்தில்லாமல்
துவண்டு போகின்றன
இத்தனைக்கு மத்தியிலும்
ஈரமாய் ஒரு
இளமொட்டு
நம்பிக்கையோடு
இதழ் விரிக்கின்றது
இது தான் யதார்த்தம்

இலங்கைப் பெண்