யதார்த்தம் - இலங்கைப் பெண்

யதார்த்தம் - Tamil Poem (தமிழ் கவிதை) by இலங்கைப் பெண்

Photo by Pawel Czerwinski on Unsplash

காய்ந்த சருகுகளுக்கு நடுவில்
துளிர் விட்ட
சின்னத் தளிர் போல
மண்ணில் மனிதம்
மரணிக்க காத்திருக்கின்றது

நடுக்காட்டில்
தனித்து நிற்கும்
ஒற்றை ரோஜா
காற்றின் தாக்குதல்
தாங்க முடியாமல்
தவிப்பது போல
சில உணர்வுகள்
உயிரைக் கொல்கின்றன

மௌன வலிகள்
புரிந்துணர்வெனும்
மருந்தில்லாமல்
துவண்டு போகின்றன

இத்தனைக்கு மத்தியிலும்
ஈரமாய் ஒரு
இளமொட்டு
நம்பிக்கையோடு
இதழ் விரிக்கின்றது
இது தான் யதார்த்தம்
 
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.