எஞ்சும் ஜீவராசி - சோமா

எஞ்சும் ஜீவராசி - Tamil Poem (தமிழ் கவிதை) by சோமா

Photo by Tengyart on Unsplash

பெண்டு குஞ்சோடு முத்தம் தழுவிய‌!
நிறைந்த இருளை களைக்கிறது!
மஞ்சலாடை போர்த்தி வெம்மை!
கக்கும் சூரிய நினைவூட்டல்.!
பணிக்கான பயணத்தின்!
அவசரமும் ஆர்ப்பாட்டமும்!
கொன்று குவித்தன!
முந்தைய இரவு இருப்பை!
மிஞ்சி அன்பு பகிர்ந்ததை.!
விஸ்தீரண நகரம்!
வாழ்வாதாரத்தை சுருக்கியிருந்தது!
வட்டம் புள்ளியாய்!
விசாலம் குறுக்கு நெடுக்காய்!
இதயம் விரைப்பைக் கொட்டையாய்.!
அமாவாஸ்யை விரதமிரா நகரில்!
ஆச்சிகளும் வடை சுடுவதில்லை!
தானம் பெற்றோ திருடித் தின்றோ!
பிழைக்கவியலா நகரம்.!
தன்னைக் கொல்லும் வித்தை!
பிடிபடா ஜீவராசியின் எரியும் வயிறு!
பலமைல் தூர பயணத்தில் குளிர்கிறது!
நீடித்திருக்கும் க‌ளைப்பின் இறுதி!
உணவு பகிர்தலில்!
பெண்டின் கொஞ்சலை!
குஞ்சு ஈனலை தனதாக்குகிறது
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.